அரங்கேறும் ராதிகா, கோபியின் திருமணம் – எழில் நிறுத்துவாரா? சீரியலில் இந்த வாரம்!
காவல் நிலையத்தில் இருந்து ராதிகா வெளியே வந்ததுமே ராதிகாவிடம் கோபி திருமணத்தை பற்றி பேசுகிறார். இந்த வாரம் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணம் நடைபெறுமா அல்லது கடைசி நேரத்தில் எழில் திருமணத்தை நிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாக்கியாவிடம் கோபி எப்போது தான் கையும் களவுமாக மாட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணுக்கு முன்னால் கோபி தவறு செய்தும் கூட கோபியை பாக்கியா நம்பி கொண்டிருக்கிறார். பாக்கியாவும், ராதிகாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் கோபி பற்றிய உண்மை வெளியே வர வாய்ப்பிருக்கிறது. இதனால் இருவரையும் பிரிக்க வேண்டும் என கோபி திட்டம் போடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய கதிர் – ரசிகர்கள் ஷாக்! இனி இவருக்கு பதில் இவர்!
இதற்கிடையில் மயூவின் பிறந்தநாளுக்காக பாக்கியாவை சமைத்து தரும்படி ராதிகா கேட்டிருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக கோபி பாக்கியா சமைத்த சாப்பாட்டில் நஞ்சை கலந்து விடுகிறார். பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்பு, பாக்கியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஒரு வழியாக பாக்கியாவின் தொல்லை ஒழிந்து விட்டது என கோபி நிம்மதியடைந்த நேரத்தில் ராதிகாவையும் விசாரிக்க வேண்டும் என ராதிகாவையும் போலீசார் கைது செய்கின்றனர்.
திருமண வேண்டுதலுக்காக கோவிலில் காவடி எடுத்த சீரியல் நடிகர் நவீன் – வைரலாகும் வீடியோ!
பாக்கியாவை நம்பியதால் என்னை காவல் நிலையத்தில் உட்கார வைத்து விட்டார் என பாக்கியா மீது ராதிகா கொலைவெறியில் இருக்கிறார். இதனால் பாக்கியாவின் முகத்திலேயே இனி முழிக்க கூடாது என ராதிகா நினைக்கிறார். பின்பு, பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை எழில் நிரூபித்து பாக்கியாவை வெளியே கூட்டி வருகிறார். ராதிகாவை கோபி வெளியே கூட்டி வருகிறார். இதற்கு பின்பு இந்த வாரம் ராதிகா மற்றும் கோபியின் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தை எழில் தடுத்து நிறுத்துவாரா, ராதிகா உண்மையை அறிந்து கோபியை விட்டு விலகுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.