பாக்கியாவிடம் உண்மையை சொல்ல போகும் ராதிகா, மாட்டிக் கொள்ளும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவுக்கு உண்மை எல்லாம் தெரிந்துவிட்ட நிலையில், கோபி பற்றிய உண்மை எல்லாம் ராதிகா பாக்கியாவிடம் சொல்ல இருப்பதாக சொல்ல அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மூர்த்தி தனம் சொன்னதை அடுத்து ராதிகாவுக்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. அதனால் கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என ராதிகா சண்டை போடுகிறார். கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல அவர் மனம் வருத்தப்பட்டு வெளியே போகிறார். தனது நண்பருடன் சேர்ந்து தண்ணீ அடிக்க, போதை தலைக்கேறி ராதிகா வீட்டிற்கு வருகிறார். அங்கே ராதிகாவுக்கு கோபியை பிடிக்காமல் இருக்க கோபி போதையில் இது தான் என்னுடைய குடும்பம் என காட்டுகிறார்.
Exams Daily Mobile App Download
அதில் தன்னுடைய தோழி பாக்கியா இருப்பதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைய கோபி ஏமாற்றிவிட்டார் என மனம் வருத்தப்படுகிறார். கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப கோபி போதை தலைக்கேறி வீட்டிற்கு செல்கிறார். அங்கே பாக்கியா அவரை படுக்க வைக்க உன்னை எனக்கு பிடிக்கவில்லை என பல முறை கோபி சொல்கிறார். பின் பாக்கியா வருத்தப்பட தூக்கத்தில் எனக்கு அவர்கள் இருவரை தான் மிகவும் பிடிக்கும் என கோபி புலம்புகிறார்.
நடிகை ஆலியா மானஸா அளித்த ஸ்பெஷல் விருந்து – பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!
அவர்கள் இல்லாமல் நான் இருக்கமாட்டேன் என சொல்ல பாக்கியாவிற்கு அது யார் என தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருமா என்பதை எல்லாம் காட்டப்பட இருக்கிறது. ராதிகா தனக்கு நல்லது செய்த தோழியின் கணவர் அவரை ஏமாற்றியது தெரிந்து பாக்கியாவிடம் உண்மையை சொல்ல போகிறார். கோபியின் உண்மையான முகத்தை பற்றி பாக்கியாவிற்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்ப இருக்கிறார். இது குறித்து இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.