கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் ராதிகா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!

0
கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் ராதிகா - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!
கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் ராதிகா - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!
கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் ராதிகா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!

பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற அனைத்து உண்மையையும் ராதிகா அறிந்து கொள்கிறார். இதனால் கோபியின் வாழ்க்கையை விட்டு ராதிகா முழுமையாக சென்று விடுவார் என எதிர்பார்த்த சமயத்தில் மீண்டும் கோபியை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் ராதிகா அறிந்துகொள்கிறார். இதற்குப் பிறகும் கோபியை ராதிகா ஏற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பல மாதங்களாக பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற விஷயத்தை ராதிகாவிடம் சொல்லாமல் கோபி பொய் சொல்லி தப்பித்துக் கொண்டே இருந்தார். ஆனால், தற்போது ராதிகாவிடம் கோபி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

Exams Daily Mobile App Download

அதாவது மூர்த்தி ராதிகாவிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற நபரின் குடும்பத்தை பார்த்து விட்டு எதுவாக இருந்தாலும் முடிவு செய்யுங்கள் என கூறிவிட்டு கிளம்புகிறார். இதனால் ராதிகா எப்போது பார்த்தாலும் உங்களது வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என கோபியிடம் சண்டையிட்டுக் கொண்டே இருந்தார். ராதிகாவிடம் என்ன சொல்லி தப்பிப்பது என தெரியாமல் கோபி தாறுமாறாக குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். குடி போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாக்கியாவுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார்.

புது வீட்டில் குடியேறிய கதிர், முல்லை – ஆதரவு தரும் தனம்! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் திருப்பம்!

பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை அறிந்து கொண்டு ராதிகா பயங்கரமாக கதறி அழுகிறார். இத்தனை நாட்களாக கோபியும் நம்மை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்தாரா என நினைத்து கோபியை விட்டு விலக நினைக்கிறார். போதை தெளிந்ததும் இரவு ராதிகாவிடம் என்ன சொன்னோம் என்கிற அனைத்தையும் கோபி மறந்து விடுகிறார். மீண்டும் பழையபடி ராதிகாவின் வீட்டிற்கே கோபி செல்கிறார். இத்தனை நாட்களாக உங்களை நம்பினேன். நீங்களும் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கூறி ராதிகா வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்கிறார். கோபி எவ்வளவு தான் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் கோபியின் மீது ராதிகா கொலைவெறியில் இருக்கிறார். இந்நிலையில் ராதிகா கோபியை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!