தனத்திடம் பேசும் பாக்கியா, கோபியை வீட்டை விட்டு துரத்தும் ராதிகா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

0
தனத்திடம் பேசும் பாக்கியா, கோபியை வீட்டை விட்டு துரத்தும் ராதிகா - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோடு!
தனத்திடம் பேசும் பாக்கியா, கோபியை வீட்டை விட்டு துரத்தும் ராதிகா - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோடு!
தனத்திடம் பேசும் பாக்கியா, கோபியை வீட்டை விட்டு துரத்தும் ராதிகா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

ராதிகாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கும் கோபி அந்த கோபத்தை இனியா மீது காட்டுகிறார். மறுபக்கத்தில், வீட்டுக்கு அழைத்து போக சொல்லி ராதிகா வற்புறுத்தும் போது கோபி மறுக்க அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் ராதிகா.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டில் உள்ள அனைவரும் ஸ்கூல், ஆபிஸ் என பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, கோபி இன்னும் கீழே இறங்கி வரவில்லை என்று ஜெனி சொல்லக்கொண்டிருக்க, கோபிக்கு ராதிகா அனுப்பிய மெஸேஜ் வருகிறது. அதை பார்த்ததும் டென்ஷனாகும் கோபி இதற்கு பேசாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்துக் கொள்கிறார். தொடர்ந்து, தாத்தா எல்லாருடைய பேரை சொல்லி கூப்பிடுவதாக கோபியிடம் கூறி இனியா சந்தோஷப்பட, கோபத்தில் இனியாவை அடிக்க கை ஓங்குகிறார் கோபி.

Exams Daily Mobile App Download

உடனே எல்லாரும் அதிர்ச்சியாக, உனக்கு உன் அப்பாவை பற்றி கவலை இல்லை. அதற்காக இனியாவை இப்படி அடிக்க கை ஓங்குவாயா என்று கோபி மீது ஈஸ்வரி கோபப்படுகிறார். அப்போது, இனியாவிடம் மன்னிப்பு கேட்கும் கோபி அவரை சமாதானப்படுத்தி ஸ்கூலுக்கு அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில், ஆபிசில் வைத்து சமையல் ஆர்டருக்காக வேலை செய்து கொண்டிருக்கும் பாக்கியா, தனத்திற்கு போன் செய்கிறார். அப்போது, குழந்தைகளை பற்றி விசாரிக்கும் பாக்கியா, மூர்த்தி மற்றும் கோபிக்கு இடையில் என்ன நடந்தது. எதற்காக அவர் கோபப்பட்டார்.

என்ன நடந்திருக்கும் என்று சொல்லி நாங்கள் யோசித்து பார்த்து விட்டோம். ஆனால், எதுவும் புரியவில்லை. நீ கூட என்னிடம் ஏதேதோ பேசிவிட்டு போன. ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. சொல்லு தனம். என்ன நடந்தது என்று தனத்திடம் கேட்கிறார். அதற்கு, ஒன்றும் இல்லை அண்ணி. நாம் எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டும் தான். அதே நேரத்தில் எல்லாரையும் கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம் அண்ணி. உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று பாக்கியாவிடம் சொல்லி விட்டு போனை வைக்கிறார் தனம். இப்போது என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பி போகிறார் பாக்கியா.

தனத்தின் பிறந்த நாளை சர்பிரைஸாக கொண்டாட திட்டமிடும் குடும்பம் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

தொடர்ந்து, ராதிகாவை பார்க்க வரும் கோபியிடம், வீட்டுக்கு போலாமா என்று கேட்கிறார் ராதிகா. அப்போது கோபி சமாளிக்க ஆரம்பிக்க கோபப்படும் ராதிகா, எனக்கு எந்த கதையையும் சொல்ல வேண்டாம். நாம போயிட்டு வந்து பேசிக்கலாம் என்று அவசரப்படுத்துகிறார். அவரை அழைத்து செல்ல மறுக்கும் கோபி என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாக நடத்த மாட்டார்கள் என சமாளிக்கிறார். அதற்கு, நான் உங்கள் குடும்பத்தை பார்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால், உங்கள் மனைவியையாவது பார்க்க வேண்டும் என்று ராதிகா கேட்கிறார். அப்போது, எதற்காக என் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி கேட்கிறாய் என கோபி கேட்க, நேற்று குன்னக்குடியில் இருந்து மூர்த்தியும், அவரது மனைவியும் வந்தார்கள்.

அவர்கள் உங்களை சரி இல்லை என்று சொன்னார்கள். உங்களை பற்றி விசாரிக்க சொன்னார்கள். அதனால் எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கிறது. உங்க குடும்பத்தை நான் ஒருமுறையாவது பார்க்க வேண்டும். பார்த்தே ஆக வேண்டும் என சொல்கிறார் ராதிகா. இப்போது, நடந்த உண்மையை தெரிந்து கொண்ட கோபி இதை காரணமாக வைத்து, நான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போக மாட்டேன் என அடம்பிடிக்க அப்போது வெளியே போங்க கோபி என்று ராதிகா காட்டமாக கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!