பாக்கியாவிற்கு வில்லியாக மாறும் ராதிகா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததும் பாக்கியா ராதிகாவை சந்திக்க செல்கிறார். அப்பொழுது பாக்கியாவை ராதிகா திட்டிவிடுவது போன்றும், பாக்கியாவிற்கு வில்லியாக ராதிகா மாறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி இவ்வளவு நடந்தும் கூட ராதிகாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்கிறார். பாக்கியா வீட்டை விட்டு சென்றதுமே குடும்பமே நிலைகுலைந்துவிட்டது. இதற்கு பிறகாவது கோபி அனைத்தையும் விட்டுவிட்டு குடும்பத்திற்காக வாழுவார் என எதிர்பார்த்த சமயத்தில் ராதிகாவை எப்படி சமாளிப்பது என திட்டம் போட்டு கொண்டிருக்கிறார். மேலும், பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரிய வந்ததுமே கோபியை விட்டு விலகிவிட வேண்டும் என நினைக்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால், மயூ கோபியுடன் பேசவேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால், ராதிகா மயூவையும் அழைத்துக்கொண்டு மும்பை போய்விட வேண்டும் என நினைக்கிறார். ஆனால், ராதிகாவின் அம்மாவும் அண்ணணும் கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி கொண்டிருக்கின்றனர். ஆனால், பாக்கியாவிற்கு துரோகம் செய்துவிட கூடாது என்பதில் ராதிகா தெளிவாக இருக்கிறார். இந்த நேரத்தில் ராதிகாவை பார்க்க பாக்கியா வீட்டிற்கு வருகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனத்தின் வைரல் வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
அதாவது, என் கூடவே இருந்து கொண்டு எனக்கு இப்படியொரு துரோகத்தை செய்வீர்கள் என கனவிலும் நினைக்கவில்லை என பாக்கியா கூறுகிறார். உடனே ராதிகா சத்தியமாக எனக்கு தெரியாது கோபி தான் உங்கள் கணவர் என்று என கூறுகிறார். ஆனாலும் பாக்கியா எதையுமே கேட்க தயாராக இல்லை. இந்த நேரத்தில் ராதிகாவும் கோபத்துடன் உங்களை பிடிக்காமல் தான் என்னிடம் வந்தார். நீங்கள் பிடிக்கும் விதமாக நடந்து கொண்டால் என்னிடம் ஏன் வரப்போகிறார் என பாக்கியாவிற்கே ராதிகா வில்லியாக மாறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தப்புகிட்ட ஏன் வர்றீங்க கழகம்