தொடங்கிய ராதிகா, பாக்கியா சண்டை – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். இந்த விஷயம் இன்னும் பாக்கியாவிற்கும் ராதிகாவிற்கும் தெரியாமல் இருக்க உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்பது பற்றிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை முறையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஒரு குடும்பபெண்ணாக இருந்து தங்களுடைய இலட்சியத்தை எப்படி செய்கிறார் என்பது பற்றி கதை இருக்கிறது. பாக்கியாவின் கணவர் கோபி பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். பாக்கியாவை ஏமாற்றி கோபி விவாகரத்து வாங்கி விட்டார். ஆனால் இந்த விஷயம் எதுவும் பாக்கியாவிற்கு தெரியாது. அதனால் கோபியை பாக்கியா கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபி பற்றிய உண்மை எல்லாம் தாத்தா ராமமூர்த்திக்கு தெரியும் ஆனாலும் அவர் சொல்லாமல் இருக்கிறார். மறுபக்கம் எழில் அப்பா பற்றி தெரிந்தும் கூட அம்மா மனது கஷ்டப்படும் என்பதால் சொல்லாமல் இருக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரிய வந்தால் கதையில் பெரிய திருப்பம் வர இருக்கிறது. அடுத்து வர போகும் எபிசோடுகளில் இந்த உண்மை ராதிகா பாக்கியா இருவருக்கும் தெரிய போகிறது.
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் “கயல்” – ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாக்கியா ராதிகா ஒருவரை சந்தித்து நியாயம் பேச இருவரும் கோபியை விட்டு கொடுக்க முடியாமல் இருக்கின்றனர். அதனால் பாக்கியா மனம் வருத்தப்படுகிறார். தனக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் அதனால் கோபி தனக்கு வேண்டும் என பேச ராதிகாவால் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் இருவருக்கும் இடையே பெரிய சண்டை வருகிறது. அது குறித்து எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.