கோபியுடன் வாழ சம்மதம் தெரிவித்த ராதிகா, அதிர்ச்சியில் அம்மா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!

0
கோபியுடன் வாழ சம்மதம் தெரிவித்த ராதிகா, அதிர்ச்சியில் அம்மா - அதிரடி திருப்பங்களுடன் 'பாக்கியலட்சுமி'!
கோபியுடன் வாழ சம்மதம் தெரிவித்த ராதிகா, அதிர்ச்சியில் அம்மா - அதிரடி திருப்பங்களுடன் 'பாக்கியலட்சுமி'!
கோபியுடன் வாழ சம்மதம் தெரிவித்த ராதிகா, அதிர்ச்சியில் அம்மா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட உள்ளது. மேலும் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாக எதிர்பாராத திருப்பங்களுடன் கதைகளம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோபி பாக்கியாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்குகிறார். மற்றொரு பக்கம் வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவை திட்டி தீர்க்கின்றனர். இந்த சமயத்தில் எழில் மட்டும் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார். இதையடுத்து இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட பாக்கியா பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு உயர்வு – அதிர்ச்சியில் பயணிகள்!

இன்னொரு பக்கம் எழில் அமிர்தாவிடம் பாக்கியாவின் நிலை குறித்து கூறி வருத்தப்படுகிறார். பதிலுக்கு அமிர்தாவும் நீங்க எதாவது பணம் ஏற்பாடு செய்து கொடுக்கலாமே என்று கூறுகிறார். அதற்கு எழில் நான் கேட்டேன் ஆனா அம்மா தான் வேணாம்னு சொல்லிட்டாங்க னு கூறுகிறார். இதை அடுத்து செல்வி நகையை அடகு வைத்து பாக்கியாவிடம் பணத்தை கொடுக்கிறார். உடனே பாக்கியா இனியாவுக்கு பீஸ் கட்ட ஸ்கூலுக்கு செல்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஸ்கூலில் ராதிகாவை சந்திக்கும் கோபி, என்ன இந்தப்பக்கம் ராதிகா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா மயூவை திரும்பவும் இதே ஸ்கூல் ல சேர்க்கலாம்னு இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து கோபி ராதிகாவிடம், இப்போ நான் தனியா தான் இருக்கேன். நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழலாம் என்று கூறுகிறார். உடனே ராதிகா எனக்கு வேலை இருக்கு கோபி நான் ஸ்கூலுக்கு போகணும்னு சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். அப்படியும் கோபி விடுவதாக இல்லை, நீ போய்ட்டுவா நான் வெயிட் பன்றேன்னு சொல்கிறார்.

இதையடுத்து பாக்கியா இனியா ஸ்கூலில் பீஸ் கட்டுவதற்கு ஆபீஸ் ரூமுக்கு செல்கிறார். ஆனால் அங்கு கோபி ஏற்கனவே பணம் கட்டிய விஷயத்தை கேட்டதும், பாக்கியா இனியாவை பாக்கணும் னு சொல்கிறார். உடனே அங்கு வந்த இனியா அப்பா எனக்கு பீஸ்கட்டனும் னு நியாபகம் வைச்சு பீஸ்கட்டிட்டாரு. அவருதான் அப்பா நீ ஏதோ பெரிசா டையலாக் பேசுன இப்ப என்ன ஆச்சு, என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இன்னொரு பக்கம் ராதிகா ஸ்கூலில் இருந்து வெளியே வர கோபி அவர் கையை பிடித்து இழுக்கிறார். உடனே ராதிகா நீங்க டீச்சரோட ஹஸ்பன்ட் னு முதல்லயே தெரிஞ்சிருந்தா நான் உங்களோட பழகி இருக்க மாட்டேன் னு கூறுகிறார். இதை கேட்ட கோபி என்னோட வாழ ஆசை இருக்கா? இல்லையா? அப்படின்னு கேட்கிறார். அதற்கு ராதிகா இருக்குனு பதில் கூறுகிறார். மேலும் இதையடுத்து கதைக்களம் எப்படி போகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கோபி ராதிகாவை திருமணம் செய்யும் விஷயத்தை கேள்வி பட்டால் ஈஸ்வரி அம்மா மனம் வருத்தப்படுவார் என்பதால் கதை மாற வாய்ப்புள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!