இந்தியாவில் கியூட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயில மாணவர்களுக்கு கியூட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கியூட் தேர்வானது கடந்த மாதம் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் நேற்று நடைபெற இருந்த தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கியூட் நுழைவுத்தேர்வு:
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் எனும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NAT) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கியூட் தேர்வு 2022 – 2023 ம் கல்வியாண்டிலும் நடத்த திட்டமிடப்பட்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. விண்ணப்ப பதிவானது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுக்கு சுமார் 11.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருத்தனர். அதில் 9.14 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
தேர்வானது NCERT யின் 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கியூட் தேர்வானது கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி நடைபெறத் தொடங்கியது. இத்தேர்வானது கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும் தேர்வானது ஆகஸ்ட் 20ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வானது தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது காலை மாலை என இரு வேளைகளில் கியூட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 17 மாநிலங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
சில மையங்களில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக நேற்று மாலை நடக்கவிருந்த கியூட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள இத்தேர்வானது வரும் 12 மற்றும் 14 ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. தற்போது பதிவிறக்கம் செய்துள்ள தேர்வுக்கூட அனுமதி சீட்டை வைத்தே மாணவர்கள் 12 – 14 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றம் செய்யப்பட்ட தேர்வை எழுதுவதில் சிரமம் இருந்தால் மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மாற்று தேதி வேண்டி கோரிக்கை விடுக்கலாம்.