தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளால் பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்றன. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வரிடம் கேட்ட கேள்வி குறித்து விரிவாக பார்க்கலாம்.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் குறிப்பாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110 என்பதன் கீழ் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதால் தகுதியான நபர்களை கண்டறிந்து அதன் பின்னர் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்பு 2022 – என்னென்ன பதவிகள்? கல்வித்தகுதி? முழு விபரங்கள் இதோ!

அதன்படி 48,84,726 பேர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தவர்களில் 35,37,693 பேர் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் அத்துடன் மீதமுள்ள தகுதியான நபர்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தகுதியான நபர்களுக்கு தற்போது வழங்கும் பணி தொடங்கியது. ஆனால் தற்போது 3 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் இந்த நகைக்கடன் தள்ளுபடி தேர்தல் நடைபெறாத பகுதிகளில் மட்டும் வழங்க வேண்டும் என்று அரசு கட்டளையிட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தி கொள்ளப்பட்ட பிறகு தகுதி உள்ள நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

TCS, Wipro, HCL உட்பட IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – 3.60 லட்சம் பேர் தேர்வு!

இதனை தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பிரச்சாரங்கள் மற்றும் பொது கூட்டங்கள் நடைபெறும். இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் நேற்று தேனியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் தமிழக முதல்வருக்கு அடுக்கான கேள்விகளை வைத்துள்ளார். இதில் குறிப்பாக நகைக்கடன் தள்ளுப்படி குறித்து முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிய நிலையில் தற்போது தகுதியுள்ள நபர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுப்படி என்று அரசு அறிவித்துள்ளது. பணக்காரர்கள் யாராவது வங்கியில் நகைகளை வைத்து கடன் பெறுவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அத்துடன் நகைக்கடன் பெற்றவர்கள் அனைவரும் ஏழைகள் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!