பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு ரத்தா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காலாண்டு தேர்வு:
தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு தற்போது நடப்பு ஆண்டில் தான் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது தான் காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த இரண்டு வாரங்களாக மர்ம காய்ச்சல் தொற்று பரவி வருகிறது.
மேலும், காய்ச்சல் பாதிப்பு புதுவையில் பள்ளி குழந்தைகளுக்கு அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் முன்னெச்சரிக்கையாகவும் ஒரு வாரம் பள்ளி குழந்தைகளுக்கு புதுவையில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 26ம் தேதியான நாளை முதல் காலாண்டு தேர்வுகள் நடக்க இருப்பதாக முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழகத்தின் 16 பகுதிகளில் நாளை (செப் 26) மழை வெளுத்து வாங்கும் – வானிலை ரிப்போர்ட்!
Exams Daily Mobile App Download
தற்போது காய்ச்சல் பரவுவதால் காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில், புதுவை கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் அவர்கள் புதுவை மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகள் திறக்கப்பட்டு, திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுகள் முடிந்து ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு, வரும் அக்டோபர் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்