காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

0

காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். இந்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடக்குமா என்பதை குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. எ . செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார். இந்நிலையில் பள்ளி திறப்பு சார்ந்த பல்வேறு விஷயங்களை குறித்து அண்ணா நூற்றாண்டு  நூலகத்தில் செவ்வாய்கிழமை அன்று  நடைபெற்றது. அப்பொழுது பள்ளி திறப்பு பற்றி கல்வி அதிகாரிகளிடம் கருத்து பெறப்பட்டுள்ளது.கேட்ப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிகள் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறையின் சார்பில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் பள்ளி நாட்கள்  குறைவாக இருக்கும் போது எவ்வாறு அணைத்து பாடங்களையும் மாணவர்களுக்கு மிக குறைத்த நாட்களில் கற்பிக்க வேண்டும் என்பதை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா இல்லையா எனபதை குறித்து எந்த முடிவும் இன்னும்  எடுக்கவில்லை. காலாண்டு தேர்வு பற்றிய முடிவை 18 பேர் கொண்ட குழுவில் ஆலோசித்து பின்னர்  தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!