தமிழகத்தில் குவாரிகள் அமைப்பது குறித்த வழக்கு – நீதிமன்றம் உத்தரவு!!

0
தமிழகத்தில் குவாரிகள் அமைப்பது குறித்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் குவாரிகள் அமைப்பது குறித்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் குவாரிகள் அமைப்பது குறித்த வழக்கு – நீதிமன்றம் உத்தரவு!!

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், அது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றம் அறிவித்த உத்தரவு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நீதிமன்றம் உத்தரவு:

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி 1 கிமீ தூரத்திற்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டது. சமீபத்தில் இந்த உத்தரவு மீது தமிழ்நாடு கனிம வள விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு காப்புக்காடுகள் நீக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மக்களே.. நீங்கள் பழைய 50 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் லட்சாதிபதியாகலாம் – முழு விவரம் உள்ளே!!

Follow our Instagram for more Latest Updates

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள், மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைகள் மற்றும் மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியே வகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இதனை எதிர்த்து இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் மார்ச் 2 ஆம் தேதிக்குள் தமிழக அரசு இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!