தமிழகத்தில் ரேஷன் பொருட்களின் தரம் ஆய்வு – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவு:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கான பல சிறப்பு திட்டங்களின் நன்மைகளும் வழங்கப்படுகின்றது. மேலும், மாதா மாதம் பொதுமக்களுக்கான தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்படுகிறது. மாநிலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தில் தற்போது குடும்ப அட்டை வழங்குதல் , உணவு பொருட்கள் வினியோகம், சிறப்பு பொது விநியோக திட்டம், ரேஷன் கடைகளை கணினிமயமாக்குதல் போன்ற பல சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
CBSE தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் – இரு பிரிவாக பிரிக்கப்படும் கல்வியாண்டு!!
அதேபோல், ரேஷன் பொருட்கள் மக்களுக்கு தடி இல்லாமல் கிடைக்கவும், தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்வது, புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களின் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரேஷன் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யவும், காலாவதியான பொருட்களை மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மேற்கூறிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வில் பாமாயில், டீத்தூள் போன்ற பொருட்கள் காலாவதி பொருட்கள் இருந்தால் அவற்றிற்கு ஆய்வு அலுவலரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.