உலகை அச்சுறுத்தும் ஆபத்து.. மீண்டும் ஒரு பெருந்தொற்று – எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

0
உலகை அச்சுறுத்தும் ஆபத்து.. மீண்டும் ஒரு பெருந்தொற்று - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!
உலகை அச்சுறுத்தும் ஆபத்து.. மீண்டும் ஒரு பெருந்தொற்று - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!
உலகை அச்சுறுத்தும் ஆபத்து.. மீண்டும் ஒரு பெருந்தொற்று – எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் FIFA உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.

ஒட்டக காய்ச்சல்:

கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் (FIFA) நடைபெற்று வருகிறது. அதனால் 16 அணிகளும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களும் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கால்பந்து மைதானத்தில் கூடியுள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதாவது,கத்தாரில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் ஒட்டக காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த காய்ச்சல் பரவினால் மூன்றில் ஒரு பங்கு மக்களை பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஒட்டகக் காய்ச்சல் கடந்த 2012 ஆம் ஆண்டு சவூதி அரேபியா, ஜோர்டான், ஏமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் பரவியது. இந்த காய்ச்சல் மனிதர்களுக்கு மட்டுமின்றி ஒட்டகங்களுக்கும் பரவக்கூடியது.

48,500 ஆண்டு கால பழைமையான ‘சோம்பி வைரஸ்’ – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Exams Daily Mobile App Download

அத்துடன் கொரோனா,குரங்கு அம்மை உள்ளிட்ட எட்டு விதமான பெருந்தொற்றுகளில் ஒட்டக காய்ச்சலும் ஒன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டக காய்ச்சல் சுவாச கோளாறு மூலமாக பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!