மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி – மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டம்!
இளங்கலை மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
ஆங்கில பயிற்சி:
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியான நிலையில் ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்தது தக்காளி விலை.. கிலோ ரூ.85க்கு விற்பனை – நிம்மதியில் மக்கள்!
இந்நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு செலவினையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதுதல், பேசுதல் மற்றும் மருத்துவ சொற்களை உச்சரித்தல் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.