டிசம்பர் 6ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அனுமதி!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் டிசம்பர் 6ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாணவர்களுக்கு அரை நாள் மற்றும் மாற்று நாட்களில் வகுப்புகள் நடைத்தப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 6ம் தேதி முதல் தொடங்கும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகள் நவம்பர் 8 ஆம் தேதி முதல் திறக்கப்படிருக்க வேண்டும். ஆனால் கனமழை காரணமாக இந்த முடிவை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
இதை தொடர்ந்து வரும் டிசம்பர் 6ம் தேதியன்று, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தினசரி அரை நாள் மட்டும் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாணவர்களுக்கு மாற்று நாட்களில் வகுப்புகள் நடைபெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது பள்ளிகளில் அனைத்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் மாணவர்களின் வருகை கட்டாயமாக இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பணி பெற ‘இது’ கட்டாயம் – நிதியமைச்சரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!
இப்போது 1,3, 5 மற்றும் ஏழாவது வகுப்புகளுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், 2, 4, 6 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பள்ளிகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து பின் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.