பள்ளிகள் திறப்பு குறித்து ஆகஸ்ட் 20 க்கு பின்னர் முடிவு – கவர்னர் அறிவிப்பு!
கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய கல்வி முறையில் மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து மகான் அரவிந்தரின் 150வது பிறந்தநாள் கூட்டு தியானத்தில் கலந்து கொண்ட புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ கல்வி நிறுவனங்கள் இன்று முதல் திறப்பு – அரசு அனுமதி!
புதுவையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வி நிறுவனங்கள், துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பெற்றோர் அனைவரையும் கலந்தாலோசித்து வருகிற 20ம் தேதிக்குள் முடிவு செய்யப்படும். அதன் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மேலும் பேசிய கவர்னர், பள்ளிகள் திறப்பது குறித்து அவசரமாக முடிவெடுக்க முடியாது எனவும் சில மாநிலங்களில் திறந்து மூடியதாகவும், சில மாநிலங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கையுடன் திறக்கப்பட இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 60% மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக கூறினார். 38 கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கிராமங்களாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 4 மாதங்களுக்கு முன்பாகவே பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.80 குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.