காவலர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மார்ச் 19, 20ம் தேதி எழுத்துத்தேர்வு!

0
காவலர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - மார்ச் 19, 20ம் தேதி எழுத்துத்தேர்வு!
காவலர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - மார்ச் 19, 20ம் தேதி எழுத்துத்தேர்வு!
காவலர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மார்ச் 19, 20ம் தேதி எழுத்துத்தேர்வு!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் புதுவையில் காவல்துறை எழுத்து தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காவல்துறை எழுத்துத்தேர்வு

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் காவலர்கள், ரேடியோ டெக்னீசியன் மற்றும் டெக் ஹேண்ட்லர் உள்ளிட்ட பணியிடங்களில் மொத்தமாக 431 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளனர்.

மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? சமூக, அரசியல் & மத நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள்!

இத்தேர்வுக்கு 17 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இதில் தகுதியான 14,787 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் நிர்வாக காரணங்களால் ரேடியோ டெக்னீசியன் பிரிவுக்கு மட்டும் தற்காலிகமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது இந்த எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு பற்றி புதுவை அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை!

இந்த அறிவிப்பில் தெரிவித்தாவது, புதுச்சேரி தலைமை செயலகம் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தேர்வு பிரிவு சார்பில் காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு வருகிற மார்ச் 19ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒரு பிரிவுக்கும், மற்றொரு பிரிவுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் டெக் ஹேண்டலர் பணியிடத்திற்கு எழுத்துத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 11.30 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!