அரசுத்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்கள் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

0
அரசுத்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்கள் - முதல்வர் முக்கிய அறிவிப்பு!
அரசுத்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்கள் - முதல்வர் முக்கிய அறிவிப்பு!
அரசுத்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்கள் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து புதுவையில் அரசு அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நிரப்பப்படும் என்று முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் இழந்து வந்தனர். அத்துடன் இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலை தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் இதனை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – CSC மூலம் சேவைகள்! முழு விவரம் இதோ!

அத்துடன் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி புரியும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டவாறு தேர்வுகளை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து புதுவை அரசின் முதல்வர் ரங்கசாமி அவர்கள் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தனது கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழாவில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில், புதுவை மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – சம்பளம் ரூ.1,77,500! பிப்.21 கடைசி நாள்!

மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதையடுத்து அரசு அலுவலகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள அரசு காலிப்பணியிடங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அரசு துறையில் உள்ள காவல்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தகவல் தெரிவித்துள்ளார். அதனால் அரசு போட்டித் தேர்வர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!