அரசு பள்ளிகள் சனிக்கிழமை அரை நாள் மட்டுமே இயங்கும் – கல்வித்துறை அறிவிப்பு!!
புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகள் சனிக்கிழமை (மார்ச் 6) அரை நாள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (சனிக்கிழமை) மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என கல்வித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு:
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த பின்னர் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதன் பிறகு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பகுதி நேரமாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மார்ச் மாதம் 4 ஆம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் முழுநேரம் செயல்பட்டு வந்தன.
சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம் – புதிய அட்டவணை வெளியீடு!!
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிக்க வாரத்தில் 6 நாட்கள் (சனிக்கிழமை உட்பட) பள்ளிகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டன. தற்போது கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி சனிக்கிழமை (இன்று) அரசு பள்ளிகள் அரை நேரம் மட்டுமே செயல்படும் எனவும், இன்று ஒரு நாள் மட்டும் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
பள்ளிகளில் உணவு சமைக்கும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதால் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்