புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – துணைநிலை ஆளுநர் விளக்கம்!
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
புதுச்சேரி அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமலில் உள்ளது. அரசின் முயற்சியால் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 1ம் தேதி முதல் கட்டமாக 9 – 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி வகுப்புகள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை அரை நாள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு – EWS, OBC கட்ஆப் மதிப்பெண்கள் சர்ச்சை!
மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த கட்டமாக 1 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரியிலும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார்.
மூத்த குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – அக்.1 முதல் தொடக்கம்!
அப்போது பேசிய அவர், பாரத் பயோடெக் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கண்டறியும் முயற்சியில் உள்ளது. மேலும் தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. புதுச்சேரியில் தமிழக பாடத்திட்டத்தை தான் பின்பற்றி வருகிறோம். அதனால் புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை திறக்க கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமிழக அரசின் முடிவை தான் எடுக்க வேண்டி வரும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.