தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நூலக புத்தகங்கள் கொள்முதல் – வெளியான புத்தகங்களின் பட்டியல்!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கு கொள்முதல் செய்த புத்தகங்களின் பெயர் பட்டியல் குறித்த முக்கிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
நூலக புத்தகங்கள்
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு பல திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் அவர்களின் அறிவை வளர்த்துக்கொள்ள பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக மத்திய அரசு 2021-2022 ஆண்டில் ரூ, 30 கோடி நிதி ஒதுக்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 37391 அரசுப் பள்ளிகளில் நூலக புத்தகங்கள் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் என்ன என்ன என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் தொடக்கப் பள்ளிகளுக்கான புத்தகங்களும், மேல்நிலை, பள்ளிகளுக்கான புத்தகங்களும், நடுநிலைப் பள்ளிகளுக்கான புத்தகங்களும் தனி தனியாக பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளன.