ஜனவரி 21 முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஜனவரி 21ம் தேதி முதல் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழகங்கள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்த காரணத்தால் கல்வி நிறுவனங்களை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசு பள்ளி, கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கி வருகின்றன.
பணியாளர்கள் புகார்களை வாட்ஸ்ஆப் மூலம் பகிரக் கூடாது – கல்லூரிக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை!!
தற்போது பஞ்சாப் அரசு ஜனவரி 21 முதல் மாநிலத்தில் உள்ள அரசு பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்த மாநில அரசு, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும், ஊழியர்களும் கண்டிப்பான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ரயில்வே துறை தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் மையம் – தேர்வர்கள் குழப்பம்!!
பஞ்சாப்பில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 5,504 பேர் உயிரிழந்து உள்ள நிலையில்,1,70,605 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 2,617 கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,484 ஆக அதிகரித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்