IPL அப்டேட்: பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க திட்டமிடும் 3 வீரர்கள் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ஐபிஎல் 2022 ஏலம் இந்த மாதம் பெங்களூரில் நடைபெற உள்ளதாக BCCI அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் குறிவைக்கும் 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:
ஐபிஎல் 15 வது சீசனுக்கான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் உட்பட மொத்தம் 10 அணிகளும் பிசிசிஐயின் விதிமுறைக்கு உட்பட்டு வீரர்களை தக்க வைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனையைத் தொடங்கியுள்ள நிலையில், யார் யார் எந்த அணிக்கு செல்வார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அதை தொடர்ந்து இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மிகப்பெரிய தொகையுடன் செல்கிறது. BCCI விதிமுறையின்படி பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் (ரூ. 12 கோடி) மற்றும் அர்ஷ்தீப் சிங் (ரூ. 4 கோடி) ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது. மேலும் IPL மெகா ஏலத்துக்கு 72 கோடிகள் மீதம் உள்ளது. மேலும் KL ராகுலை லக்னோ அணி 17 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டால் பஞ்சாப் அணி இம்முறை யார் கேப்டன்ஷிப் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. எனவே மெகா ஏலத்தில் வீரர்களை வாங்குவதில் பஞ்சாப் அணி அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் எடுக்கும் வீரர்கள் பட்டியலில் 3 வீரர்களை குறிவைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கிறிஸ் லின் , நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர் மார்டின் கப்தில் மற்றும் தற்போதைய இந்திய அணி தொடக்க வீரர் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 3வீரர்களையும் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.