பஞ்சாப் & சிந்து வங்கியில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் உள்ள Risk Manager மற்றும் IT Manager ஆகிய காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வங்கி பணிகளுக்கான உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பஞ்சாப் & சிந்து வங்கியில் Risk Manager மற்றும் IT Manager ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேற்காணும் பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 25-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation/ MBA/ PG Diploma/ BE/ B.Tech/ ME/ M.Tech/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அவற்றுடன் இந்த பணி பிரிவுகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
- குறைந்தபட்சம் ரூ.69,810/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரை பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Short listing மற்றும் Personal Interaction/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-, SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் வரும் 28.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.அதற்கான நகலினை வரும் 08.12.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.