PNB வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? ஜனவரி 1 முதல் உங்களின் சேமிப்பு தொகை பல மடங்கு உயர்வு!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு மற்றும் FD திட்டத்திற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
வட்டி விகிதம்:
இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு வங்கிகளிலும் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது அந்த வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் FD திட்டத்திற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி சேமிப்பு கணக்கின் கீழ் 100 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சேமித்தால் ஆண்டுக்கு 3% வட்டியும், 10 லட்சம் ரூபாய் மற்றும் 100 கோடி ரூபாய் கீழ் சேமித்தால் 2.75% வட்டி விகிதம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், FD திட்டத்தில் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.50% வட்டி விகிதமும், 667 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.75% வட்டி விகிதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.500க்கு வீட்டு சிலிண்டர் விநியோகம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அரசு!
மேலும் 666 நாட்கள் வரையிலான FD திட்டத்திற்கு 7.25% வட்டி விகிதமும், 180 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையிலான FD திட்டத்திற்கு 5.50% வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் FD திட்டத்தில் 46 முதல் 179 நாட்கள் வரை சேமித்தால் 4.50% வட்டி விகிதமும், அத்துடன் 7 முதல் 45 நாட்கள் வரை நீங்கள் சேமித்தால் 3.50% வட்டி விகிதம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவதாகவும் PNB நிறுவனம் அறிவித்துள்ளது.