இரவு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு ரத்து – பஞ்சாப் அரசு அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் 0.4% ஆக குறைந்துள்ளதால், இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவை இன்று (ஜூலை 12) முதல் நீக்குவதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு ரத்து:
நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்ற நிலையில் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் 0.4% மாக குறைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த வார இறுதி மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் வீடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 100பேரும், வெளிப்புறங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் 200 பேரும் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அவர்களின் உத்தரவின் படி, கொரோனா தடுப்பூசிகளில் குறைந்தது ஒரு டோஸ் பெற்றிருக்கும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மட்டும் பார்கள், சினிமாக்கள், உணவகங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள், மால்கள், நீச்சல் குளங்கள், பயிற்சி மையங்கள், விளையாட்டு வளாகங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 12 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – டெல்லி அரசு அறிவிப்பு!
கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களை பொருத்தளவு முறையான தடுப்பூசி சான்றிதழ்களை வழங்கக்கூடியவர்களுக்கு மட்டும் திறக்கப்படும். மேலும் பேரணிகள் மற்றும் பிற கூட்டங்களை நடத்தும்போது கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என காவல்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்தில் நேற்று (ஜூலை 11) ஒரு நாளில் 128 புதிய பாதிப்பும், 6 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.