வார இறுதி, இரவு முழு ஊரடங்கு உத்தரவு ரத்து – பஞ்சாப் அரசு அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.4%மாக குறைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 9) முதல் வார இறுதி மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ம் அலை தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள வார இறுதி மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக கடந்த 5 ஆம் தேதி முதல் வெளிப்புறங்களில் நடைபெறும் கூட்டத்தில் 100 முதல் 200 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், பேரணிகளில் நோய் தொற்று விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 90 மாவட்டங்களில் 80% கொரோனா பாதிப்பு – மத்திய அரசு தகவல்!
அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பார்கள், சினிமா அரங்குகள், உணவகங்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், மால்கள், விளையாட்டு வளாகங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றைத் திறக்க அனுமதிப்பதாக அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கையானது ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களை விட மிகக் குறைவாக உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சாபில் ஒரு நாளில் 623 புதிய பாதிப்புகள் மற்றும் 51 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.