தமிழக பள்ளி மாணவர்களுக்கான தண்டனை முறைகள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான தண்டனை முறைகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான தண்டனை முறைகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான தண்டனை முறைகள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடும் செய்திகள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ள நிலையில் மாணவர்களுக்கு நூதன தண்டனைகள் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் மனநிலையில் பெரிய மாற்றம் வந்துள்ளது. அதனால் பல மாணவர்கள் வகுப்பறையில் பொருள்களை சேதப்படுத்துதல், ஆசிரியர்களை மதிக்காமல் இருத்தல் உள்ளிட்ட மோசமான காரியங்களை செய்வது போல வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் முதலில் அந்த மாணவரின் கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பின் மாணவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். மேலும் பள்ளி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் சேதமடைந்த பொருளை மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றித் தர வேண்டும்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி அரசு அலுவலகங்கள் & கல்லூரிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு

மேலும் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர்கள், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், ஆசிரியர்களை அவமதித்தல், ராகிங், சாதி மத அடிப்படையில் பிற மாணவர்களை புண்படுத்துதல், உருவகேலி செய்தல், பள்ளி சுவர்களில் படங்களை வரைதல், தகாத வார்த்தைகள் பேசுதல் போன்றவை மாணவர்கள் அடிக்கடி செய்யும் தவறுகள் ஆகும் இந்த செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவருக்கு முதலில் பள்ளியில் ஆலோசகர் தக்க ஆலோசனை வழங்க வேண்டும். அந்த மாணவர் 2வது 3வது முறை இதே தவறை செய்தால் சில ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.

அதன் படி,

  • 5 திருக்குறளை மாணவர் படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதி காட்ட வேண்டும்.
  • 2 நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும்
  • 5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக் காட்ட வேண்டும்.
  • ஒரு வாரத்துக்கு வகுப்பு தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.
  • 5 வரலாற்று தலைவர்கள் பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.
  • நல்ல பழக்கவழக்கங்கள் பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றி வரைபடம் எழுத வேண்டும்
  • பள்ளியில் சிறிய காய் கனி தோட்டம் அமைக்க வேண்டும்
  • பிளாஸ்டிக் மற்றும் இதர பொருள்களை வைத்து கைவினை பொருள்கள் தயாரிக்க வேண்டும்.
  • மேலும் மாணவர்கள் தனது தவறை திருத்திக் கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் தந்து ஏன் இந்த தவறை செய்தார் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க செய்ய வேண்டும்
  • அதன் பின் கூட மாணவர் தன்னுடைய தவறை உணரவில்லை என்றால் அருகே உள்ள காவல் நிலையத்தில் இருந்து குழந்தைநேய அதிகாரி மூலம் அறிவுரை வழங்கலாம். அதன் பின் கூட தவறுகள் தொடர்ந்தால் அருகே இருக்கும் அரசு பள்ளிக்கு மாணவரை மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறு செய்யும் மாணவருக்கு பல முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!