புதுக்கோட்டையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 19 நடைபெறுகிறது!!
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில் இலுப்பூர் மதர் தெரசா பொறியியல் கல்லூரி வளாகத்தில் மூன்றாம் கட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில் இலுப்பூர் மதர் தெரசா பொறியியல் கல்லூரி வளாகத்தில் மூன்றாம் கட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த முகாமில் 185 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன.
TN Job “FB Group” Join Now
அதில் 13756 வேலையற்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் 3160 பேருக்கு உடனடி பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இதன்படி தற்போது தனியார் துறையில் எஞ்சிய காலியிடங்களை நிரப்ப மூன்றாம் கட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி முகாம் – பிப்ரவரி 17 நடைபெறும்!!
அதில் கலந்து கொள்ள 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது சுயகுறிப்பு விவரங்களுடன், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் போன்றவற்றை கொண்டு வர வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்