தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விடுமுறை ரத்து:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அரசு சார்பில் ஊரடங்கு தளர்வுகளை வாபஸ் பெறுவதாக பல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருவிழாக்கள், மத கூட்டங்கள் நடத்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக ஏப்ரல் 12 ஆம் தேதி புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் ஆண்கள் தான் அதிகம் பாதிப்பு – ஆய்வில் தகவல்!!
மேலும் அரசு தரப்பில் வழிபாட்டுத்தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் புதிதாக அறிவித்துள்ள கட்டுப்பாடு வழிமுறைகளில் அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி அந்த மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். அதில் கொரோனா ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.