இறுதியாண்டு பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து !!!
புதுச்சேரியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்ச்சி ஆனது மாற்று வழியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் தேர்வுகளை தள்ளிவைத்து கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு செய்தனர். மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதினால் பல தேர்வுகளை ரத்து செய்தும் அறிவிப்புகள் வெளியானது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் கடந்த வாரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு போன்ற அனைத்து பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அரசாணை வெளியிட்டு இருந்தது. அதேபோல் தங்களுக்குமான தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என அரசிற்கு கல்லூரி மாணவர்களும் கோரிக்கைகளை வைத்த வண்ணம் இருந்தனர்.
இது குறித்து பரிசீலித்த உயர்கல்வித்துறை தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து உறுப்பு கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால் அதற்கான மாற்று வழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்களுக்கு அவர்களின் செய்முறை தேர்வுகள் மற்றும் இன்டெர்னல் தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்திலும் மாணவர்கள் தேர்வினை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |