மாநில அந்தஸ்து பெறும் புதுச்சேரி, ஊக்கத்தொகை & ஊதியம் அதிகரிப்பு – முதல்வரின் சூப்பர் அறிவிப்புகள்!

0
மாநில அந்தஸ்து பெறும் புதுச்சேரி, ஊக்கத்தொகை & ஊதியம் அதிகரிப்பு - முதல்வரின் சூப்பர் அறிவிப்புகள்!
மாநில அந்தஸ்து பெறும் புதுச்சேரி, ஊக்கத்தொகை & ஊதியம் அதிகரிப்பு - முதல்வரின் சூப்பர் அறிவிப்புகள்!
மாநில அந்தஸ்து பெறும் புதுச்சேரி, ஊக்கத்தொகை & ஊதியம் அதிகரிப்பு – முதல்வரின் சூப்பர் அறிவிப்புகள்!

புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் பட்ஜெட் விவாதம் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கப்பட்டு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

புதுச்சேரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அன்று மாலை 4.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆனது. இந்நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் குறித்த விவாதம் கடந்த திங்கள் கிழமை தொடங்கப்பட்டு மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. தற்போது அதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து முதல்வர் ரங்கசாமி பேசி உள்ளார். அவை,

  • புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு தொடர்ந்து வற்புறுத்த உள்ளதாக தெரிவித்தார்.
  • பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20,000 ஆக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் – நாளை (செப்.2) வெளியீடு!

  • புதுச்சேரியில் அரசு துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும்.
  • புதுச்சேரியில் வவுச்சர் ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • புதுச்சேரிக்கு மேலும் ரூ.500 கோடி கூடுதல் நிதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • பாசிக், பாஸ்ப்கோ நிறுவனங்களை மீண்டும் சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

  • நடப்பு நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியாக வழங்கப்படும்.
  • புதுச்சேரியில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.9000 ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!