மதிய உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் ரொக்கம்
மதிய உணவு திட்டத்தின்கீழ் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் ரொக்கம் விரைவில் வழங்க புதுச்சேரி அரசு முய்யற்சி வருகிறது. அது குறித்த தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலினை கருத்தில் கொண்டு மத்திய கல்வி துரையின் வழிகாட்டுதலின் படி மதிய உணவு திட்டத்தின்கீழ் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் ரொக்கம் புதுச்சேரியில் விரைவில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் வகுப்பிற்கு தகுந்தபடி ரூ. 290 முதல் ரூ. 390 வரை வழங்கப்பட இருக்கிறது. இந்த பொருட்களை வழங்கும்போது போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மானியத்தினை பயன்படுத்தி மாணவர்களுக்கு சானிடைசர் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை பெற்றோர்கள் கொண்டு வரவே வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்