புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை – சுகாதாரத்துறை பரிந்துரை!!
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை, துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் விடுமுறை:
புதுச்சேரியில் கல்வித்துறைக்கென்று தனி வாரியம் கிடையாது. இதனால் தமிழக அரசின் கல்வித்திட்டம் மற்றும் வழிமுறைகளே அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு கொரோனா பரவலுக்கு பின்னர் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் முழுநேர நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட தமிழிசை அவர்கள் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி 1 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் கோடை விடுமுறை ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை போன்று புதுவையிலும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!
துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களின் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அவர்கள், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக பள்ளிகளை மூடி விடுமுறை அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். மேலும் பரிசோதனை, நோய் பரவல் கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.