புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நவம்பர் மாதம் நடக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் நடவடிக்கைகளை தள்ளிவைக்க உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்:

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து கடந்த நாட்களில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. புதுச்சேரியில் இறுதியாக கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழகத்தை போலவே புதுவையிலும், அக்டோபர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடத்தப்பட்டது. இருப்பினும், பல சர்ச்சைகள் தேர்தல் காரணமாக எழுப்பப்பட்டது. இதனால் பழைய தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் மின் பற்றாக்குறை, மின்தடை? – அமைச்சர் விளக்கம்!

மேலும், வரும் நவம்பர் மாதம் 2,7 மற்றும் 13 தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 8ம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – தமிழக அரசு ஆணை!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற்றது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என்ற காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். அரசு விரிவான பதிலை இந்த மனுவிற்கு அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!