ஆகஸ்ட் 1 முதல் 15 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் அரசு முன்னதாக அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
புதுச்சேரியில் முன்னதாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக அதிக அளவில் பரவி வந்தது. இதனால் அரசு அங்கு தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நோய் தடுப்பு நடவடிக்கையாக கடைபிடித்து. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு திரை அரங்குகள், கல்விநிலையங்கள், பொது போக்குவரத்து போன்ற அனைத்தும் தடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது சில வாரங்களாக கொரோனா பாதிப்பு புதுவையில் குறைந்து வந்தது.
தமிழகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகள் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்!
இதனால் அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இடையில் புதுவையில் பள்ளிகள் திறக்க இருப்பதாக அரசு அறிவித்த நிலையில், திடீரென்று பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதால் பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு முன்னதாக அறிவித்திருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 31ம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நீடித்து அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், இன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். தொடர்ந்து நாளை முதல் கொரோனா தடுப்பு விதிகளுடன் இரவு 9 மணி வரை 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் மற்றும் மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் 50% பேருக்கு அனுமதி போன்ற கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.