ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசுத்தொகை – புதுச்சேரி அரசு ஒப்புதல்!!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
பொங்கல் பரிசு
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பணம், 1 கிலோ அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள மக்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 14 ஆம் தேதி சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் – நிர்வாகம் அறிவிப்பு!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 பணத்தை வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பணம் ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.