12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 29, 30ம் தேதிகளில் விடுமுறை – அரசு அறிவிப்பு!!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்க இருப்பதால் மார்ச் 29 மற்றும் 30ம் தேதிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி தேர்தல் பணிகள் நடக்கிறது. தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் துறை அறிவுறுத்தல்!!
தேர்தல் பணியாளர்கள்:
தேர்தல் பணிகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் படை வீர்ரகள், தன்னார்வலர்கள் போன்றவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் வாக்குப்பதிவு அரசு அலுவலக வளாகங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் நடைபெறும். தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
விடுமுறை:
தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு நடப்பு ஆண்டில் நான்கு கட்டங்களாக தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்க இருக்கிறது. மார்ச் 29 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்க இருப்பதால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னா அறிவித்துள்ளார். தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்