பள்ளிகளில் மாணவர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் – கவர்னர் உரை!!

0
பள்ளிகளில் மாணவர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் - கவர்னர் உரை!!
பள்ளிகளில் மாணவர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் - கவர்னர் உரை!!
பள்ளிகளில் மாணவர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் – கவர்னர் உரை!!

புதுச்சேரியில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைகளை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி காணொளி மூலம் ஆய்வு செய்தார். அப்போது அவரது உத்தரவின் படி அனைத்து பள்ளி முதல்வர்களுடன் பள்ளிகளில் கல்வி குறித்து மட்டுமல்லாமல், நிர்வாகம் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து பேசினார்.

பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை குறித்த செயல்பாடுகளை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி காணொளி மூலமாக ஆய்வு நடத்தினார். அந்த கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆகியோர் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசித்தனர். அப்போது பேசிய கவர்னர் பள்ளிகளில்செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசினார்.

8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசுகள் அறிவிப்பு!!

அந்த கருத்து கூட்டத்தில் அவர் கூறியதாவது, “மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் கற்றுக் கொள்ளாமல் ஒரு வகுப்பினை நடத்தும் அளவிற்கு சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்துவதோடு அவர்கள் கடமை முடியாமல் மாணவர்கள் அதனை எளிதில் புரிந்து கொள்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் படிப்புகளை கவனிக்க பெற்றோர்கள் கூட்டம் நடத்தி மாணவர்கள் குறித்த கருத்து கேட்டு பின்னர் மாணவர்களை கவனிக்க வேண்டும்.

எம்.பில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – ஜனவரி 29 கடைசி நாள்!!

எதிர்காலத்தில் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்ற தெளிவான முடிவில் இல்லாத மாணவர்களை வழிகாட்டி தெளிவான பாதையில் அழைத்து செல்ல வேண்டும். அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். ஏற்கனவே அந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களை உதவிக்கு அழைத்து கொள்ளலாம். பள்ளிகளில் உள்ள பொது நூலகங்கள் மூலம் அன்றாட நிகழ்வுகளை மாணவர்களுக்கு பொது அறிவு மற்றும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மட்டும் அல்லாமல் கலை சார்ந்த செயல்பாடுகளை மாணவர்கள் செய்ய ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகளில் தேவை இல்லாமல் இருக்கும் பொருட்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேசிய மாணவர் படையிலும், தேசிய சேவை திட்டத்திலும் சேர்ந்துள்ள மாணவர்கள் முதலில் தங்கள் பள்ளிகளிலேயே ஒழுக்கம், கட்டுப்பாடு சேவை மற்றும் தூய்மை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் நடைபெறுவதால் ஜனவரி 25-ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுடன் ‘பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை வளரச்செய்தல்’ என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் கிரண்பேடி உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!