முதியோர் மாத உதவித்தொகை ரூ.500 உயர்வு – புதுச்சேரி ஆளுநர் அறிவிப்பு!
புதுச்சேரியில் முதியவர்களுக்கான மாத ஓய்வூதியம் தொகை உயர்த்தப்படுவதாகவும், புதிதாக உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்தவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஒப்புதல்:
புதுச்சேரியில் என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராக பதவியில் உள்ளார். இவரது தலைமையிலான அரசு புதுவையில் ஆட்சி செய்து வருகிறது. புதுவையில் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பதவியில் உள்ளார். அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகள் இந்த மாதம் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுகாதார வல்லுனர்களின் அறிவுறுத்தலின் படி, நேரடி வகுப்புகளை தொடங்கும் முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 46 காலிப்பணியிடங்கள்!!!
தற்போது புதுவையில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ.500 உயர்த்துவதற்கான அரசாணையை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில் புதுவை ஆளுநர் தமிழிசை இந்த ஆணைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, 18 வயது முதல் 59 வயதினருக்கு மாதம் ரூ.2,000ம், 60 முதல் 79 வயதினருக்கு மாதம் ரூ.2,500ம், 80 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,500ம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு முடிவு ஒத்திவைப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!
தொடர்ந்து இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதில் மேலும், புதுச்சேரியில் அரசின் சுகாதாரத்துறைச் செயலர் அவர்களின் தலைமையில் மாநிலத்தில் புதிதாக உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (SOTTO) மையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், SOTTO செயல்பாடுகளில் துறை ரீதியாக உதவி, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஜிப்மர் பேராசிரியர்களை கொண்ட மாநில அளவிலான உறுப்பு மாற்றும் நிபுணர் குழு அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.