75 சதவீத பள்ளி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் – புதுச்சேரி அரசு உத்தரவு!!
புதுச்சேரி மாநிலத்தில் இந்த கல்வி ஆண்டிற்கு 75 சதவீத பள்ளி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று தவணைகளில் பணத்தினை வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டில் இருந்து கொரோனா என்ற நோய் பரவல் மக்களை பல விதங்களில் பாதிப்படைய வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த நோய் பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பள்ளி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இப்படியாக இருக்க, இது குறித்து புதுச்சேரி மாநில அரசு ஒரு செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
Microsoft windows 11 இன்று வெளியீடு – சிறப்பு அம்சங்கள் விளக்கம்!
அதில் தனியார் பள்ளிகள் இந்த கல்வி ஆண்டில் (அதாவது 2021 – 2022) கட்டண குழு நிர்ணயித்துள்ள தொகையில் 75 சதவீதத்தினை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடைப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
75 சதவீத பள்ளி கட்டணத்தினை பள்ளிகள் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த ஆண்டு விளையாட்டு கட்டணம், பேருந்து கட்டணம், சீருடைகள், கூடுதல் பாடத்திட்ட கட்டணம், நூலகக் கட்டணம், ஆய்வகக் கட்டணம் மற்றும் மருத்துவ கட்டணம் ஆகியவற்றினை வசூலிக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு நேரடி பாடங்கள் நடைபெறும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.