புதுச்சேரி அரசின் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை – ஆகஸ்ட் 26 ஆம் தேதி தாக்கல்!
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிதாக ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட்:
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் காரணமாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதன் பின்னர் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததால் மத்திய அரசே நேரடியாக புதுவையின் 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் பின்னர் தற்போது தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
நீலகிரி, ஊட்டி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதிய ஆட்சி அமைந்து பல மாதங்கள் ஆன நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. இது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வந்துவிடும். வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை ஆளுநர் உரைக்கு பின்னர் துணை சபாநாயகர் தேர்தல் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் மாலை சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அவர் முதல்வராக பதவியேற்ற பின்னர் இதுவரை டெல்லி செல்லவில்லை. மேலும் அவர் டெல்லிக்கு செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் தகவல் தெரிவிப்பதாக கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டேன் உடல்நிலை நன்றாக உள்ளது என அவர் தெரிவித்தார்.