அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, எண்ணெய் இலவசம் – புதுச்சேரி அரசு ஒப்புதல்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மாதந்தோறும் இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரேஷனில் இலவசம்
புதுச்சேரி அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மலிவு விலையில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
சமையல் போட்டிக்கு தயாராகும் சந்தியா, உற்சாகப்படுத்தும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இனி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் தீபாவளி மற்றும் ஓணம் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சர்க்கரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. தவிர ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
முன்னதாக புதுச்சேரி அமைச்சரவையின் இந்த திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனிடையே புதுச்சேரியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் முன்பே செயல்படுத்தப்பட இருந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.