ரேஷன் அட்டைதாரர்கள் வங்கிக்கணக்கில் ரூ.1500 வழங்கல் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் தவணையாக ரூ.1500 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசுடன், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு மாநில அரசுகள் கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணத் தொகை வழங்கினர், தமிழகத்திலும் ரூ.4000 கொரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரு சிமெண்ட் மூட்டை விலை ரூ.520 ஆக உயர்வு – கட்டுமான பொறியாளர்கள் அதிர்ச்சி!!
அதற்கான முதல் தவணை மே மாதமே ரூ.2000 விநியோகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அதற்கான முதல் தவணை தொகையான ரூ.1500 இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக ரூ.1500 செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.