புதுச்சேரியில் ஒரே நாளில் 1598 பேருக்கு கொரோனா பாதிப்பு – 20 பேர் உயிரிழப்பு!!

0
புதுச்சேரியில் ஒரே நாளில் 1598 பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 பேர் உயிரிழப்பு!!
புதுச்சேரியில் ஒரே நாளில் 1598 பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 பேர் உயிரிழப்பு!!
புதுச்சேரியில் ஒரே நாளில் 1598 பேருக்கு கொரோனா பாதிப்பு – 20 பேர் உயிரிழப்பு!!

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

கொரோனா பரவல்:

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் புதுச்சேரி முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று 1774 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் கிராமங்களில் வீடு வீடாக பரிசோதனை – பிரதமர் அறிவுறுத்தல்!!

புதுச்சேரியில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் 64,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1686 பேர் மருத்துவமனைகளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இலேசான அறிகுறிகள் உள்ளவர்கள் 12179 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 49,836 பேர் குணமடைந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதுவரை கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டு 908 பேர் உயிரிழந்து உள்ளனர். மக்கள் அரசு தெரிவித்த கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விதிகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!