ஜூலை 16 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் வருகிற ஜூலை 16 ஆம் தேதி முதல் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் விரைவாக திறக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ஜூலை 13ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜூலை 16 முதல் அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் புதுச்சேரி முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, முதல்கட்டமாக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் மருத்துவக் கல்லூரியை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அனைத்து கல்லூரிகளும் ஜூலை 16 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.