சி.பி.எஸ்.சி 10 ஆம் வகுப்பு முடிவுகள் – கல்வி வாரியம் தகவல் !!!!
புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பயிலும் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் கடந்த கல்வி ஆண்டில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதன் பின்னர் நீண்ட இழுபறியினை தொடர்ந்து சமீபத்தில் இவ்வருட தொடக்கத்தில் தான் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. நாடு முழுவதும் செயல்படும் இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வுகள் நடத்தப்பட சி.பி.எஸ்.சி கல்வி வாரியம் திட்டமிட்டு இருந்தது.
தேர்வு முடிவுகள் :
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்க்கம் அதிகரித்து வருவதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்தும் செய்யப்பட்டது.
ஆனால் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது அது குறித்து சி.பி.எஸ்.சி கல்வி வாரியம் அதிகாரபூர்வமாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் இத்தேர்வு முடிவுகள் அனைத்தும் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள மதிப்பெண் முறையும் வெளியாகியுள்ளது. அதனை கீழே அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் முறை :
- ‘யூனிட்’ தேர்வு – 10 மதிப்பெண்கள்
- ‘மிட் டர்ம்’ தேர்வு – 30 மதிப்பெண்கள்
- ‘பிரீபோர்ட்’ தேர்வு – 40 மதிப்பெண்கள்
- ‘இன்டர்னல் அசஸ்மன்ட்’ (உள்மதிப்பீடு) – 20 மதிப்பெண்கள்
மொத்தமாக 100 மதிப்பெண்கள் இந்த முறையில் வழங்கப்பட உள்ளது.