மார்ச் 13 முதல் காவலர் உடற்தகுதி தேர்வு துவக்கம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தினசரி 500 விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்தகுதி தேர்வு
புதுச்சேரி காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காவல்துறையில் காலியாக இருக்கும் 256 காவல் அதிகாரிகள் மற்றும் 25 ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, சுமார் 281 காலிப்பணியிடங்களுக்கு இதுவரை 15,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதியன்று உடற்தகுதி தேர்வு நடத்தப்பட இருப்பதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறை அதிகாரி சந்திரன் கூறுகையில், புதுச்சேரி கோரிமேடு மைதானத்தில், காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரைக்கும் நடத்தப்பட உள்ளது. தினசரி காலை 6 மணிக்கு துவங்கும் இந்த தேர்வில் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம். இதை தொடர்ந்து ஓட்டுநர்களுக்கான தேர்வு மார்ச் 31 ஆம் தேதியன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.