மார்ச் 28 வரை அரசு கல்லூரிக்கு விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!!
புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரியில் 4 பேராசிரியர்கள் மற்றும் மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கல்லூரி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி:
புதுச்சேரியில் கொரோனா தாக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன.
TN Job “FB Group” Join Now
கல்லூரிகளில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 4 பேராசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரிக்கு மட்டும் 4 நாட்களுக்கு தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டது.
புதுச்சேரி 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆளுநர் ஆலோசனை!!
அந்த கல்லூரி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அந்த கல்லூரியில் 2, 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு தேர்வு மட்டும் நடத்தப்பட்டு மற்ற தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த கல்லூரி ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மார்ச் மாதம் 28 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.